
புதியமாதவி
மும்பையில், ஒரு பன்னாட்டு வங்கியில் 22 ஆண்டுகள் பணி செய்துவிட்டு 2004ல் விருப்ப ஓய்வு பெற்றுள்ளவர். சூரியப் பயணம், ஹேராம் என்ற இரண்டு கவிதைநூல்கள் வெளி வந்துள்ளன. இரண்டு குறுநாவல்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், அரசியல், சமுதாயக் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். மும்பையிலிருந்து வெளிவரும் தமிழ் வார இதழ் "தமிழ் போஸ்ட்"ன் துணையாசிரியர். பெண்ணியம் பற்றி ஆய்வு செய்வதில் ஆர்வம் உள்ளவர்.
Tags: No tags specified yet.
|